போலீஸ் போல் பேசி மோசடி;இருவர் கைது

கோவை: கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரி ஒருவரிடம் போனில் பேசிய மர்ம நபர்கள், எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஆபாச படங்கள் பார்த்தது, பகிர்ந்ததற்காக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி மிரட்டினர்.

வழக்கில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க அறிவுறுத்தியதை நம்பி ரூ.38 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினார். மோசடி செய்தது தெரிந்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பென்னி, 51 சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர்குமார், 21 ஆகியோரை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், மோசடியில் தொடர்புடைய பச்சாபாளையத்தைச் சேர்ந்த சபரி , 25 மற்றும் நேரு நகரை சேர்ந்த வினு, 21 ஆகியோரை கைது செய்தனர். கோவை ஹரிபிரசாத் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement