சொத்துப் பிரச்னை 6 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம்: சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் 39. இவரும் அதே பகுதியில் வசிக்கும் அழகர்சாமி 49, இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் சொந்த ஊரான ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி பகுதியில் உள்ளது. இந்த சொத்தை பங்கிட்டு கொள்வதில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து ராஜேந்திரன் புகாரில் அழகர்சாமி, பிரதீபன், பணம்பொதி ஆகியோர் மீதும், அழகர்சாமி புகாரில், சரத்குமார், சுதாகர், ராஜேந்திரன் ஆகியோர் மீதும் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement