ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல்: எம்.பி., வரவேற்பு

நாமக்கல்:நாமக்கல், கொ.ம.தே.க.,-எம்.பி., மாதேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்லில் இருந்து பெரம்பலுார் வழியாக அரியலுாருக்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு, முதற்கட்டமாக விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ரயில்வே பணிகளுக்காக, 2009-14 நிதியாண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு, 879 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நிதியாண்டில், 8 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு, 7,611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், கடந்த, ஏப்., 1ல், 8 புதிய ரயில் வழித்தடங்கள், 3 அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்கள், 8 இரட்டை ரயில் பாதைகள் என மொத்தம், 1,874 கி.மீ., துாரத்திற்கு, 27,282 கோடி ரூபாய் மதிப்பில், 19 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு புதிய ரயில்வே திட்டங்கள் அறிவித்துள்ள மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement