லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
நமது சிறப்பு நிருபர்
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடு தழுவிய அளவில் நடந்த போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 25) ராஜினாமா செய்தார்.
இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்ற மத்திய அமைச்சர்கள் யார் யார் பதவியை ராஜினாமா செய்தனர், பதவி விலகலுக்கான காரணம் குறித்து ஓர் சிறப்பு அலசல்.
* லால் பகதூர் சாஸ்திரி, நவம்பர் 1956 (காங்கிரஸ்)
காரணம்: 150க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான அரியலூர் ரயில் விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, அவ்விபத்திற்குப் பிறகு ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
* டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பிப்ரவரி 1958 (காங்கிரஸ்)
முந்த்ரா நிதி ஊழல் காரணமாக நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
* வி.கே. கிருஷ்ண மேனன் நவம்பர், 1962 (காங்கிரஸ்)
1962ல் சீனாவுடனான போரின்போது இந்தியாவின் ராணுவத்தை தயார்படுத்தவில்லை என குற்றச்சாட்டிற்கு பிறகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
* வி.பி. சிங், ஏப்ரல், 1987 (காங்கிரஸ்)
எச்.டி.டபிள்யூ நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மற்றும் பேர்பாக்ஸ் விவகாரம் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் ராஜிவ் அமைச்சரவையிலிருந்து வி.பி. சிங் பதவியை ராஜினாமா செய்தார்.
* மாதவராவ் சிந்தியா, ஜனவரி 1993 | காங்கிரஸ்
குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரஷ்யாவின் Tu-154 விமான விபத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்றதால், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
* நிதிஷ் குமார், ஆகஸ்ட் 1999 (Samata Party)
மேற்கு வங்கத்தில் 290 பேர் உயிரிழந்த கைசல் ரயில் விபத்திற்குப் பிறகு, தார்மீகப் பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
* சிவராஜ் பாட்டீல், நவம்பர் 2008 (காங்கிரஸ்)
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்விகள் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார்.
* ஆ.ராஜா, நவம்பர் 2010 (திமுக)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியை ஆ.ராஜா ராஜினாமா செய்தார்.
* தயாநிதி மாறன், ஜூலை- 2011 (திமுக)
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது (2004-2007), ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் குழுமத்திற்கு விற்கும்படி வற்புறுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
* பவன் குமார் பன்சால், மே 2013 (காங்கிரஸ்)
தனது மருமகன் விஜய் சிங்லா சம்பந்தப்பட்ட ஒரு பெரும் ஊழல் வழக்கு காரணமாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சால் ராஜினாமா செய்தார்.
* அஸ்வனி குமார், மே- 2013 (காங்கிரஸ்)
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சிபிஐ விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவியை அஸ்வனி குமார் ராஜினாமா செய்தார்.
* எம்.ஜே. அக்பர், அக்டோபர்- 2018 (பாஜ)
பாலியல் சீண்டல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
* தர்மேந்திர பிரதான், ஜூலை- 2026 (பாஜ)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தை தொடரந்து வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வாசகர் கருத்து (17)
Sun - ,
26 ஜூலை,2026 - 18:08 Report Abuse
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 1991 முதல் நரசிம்மராவ் அமைச்சரவையில் பதவி வகித்த காங்கிரசின் வாழப்பாடி K.ராமமூர்த்தி காவிரி பிரச்சனையில் நரசிம்மராவுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் தனது மத்தியஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வாழப்பாடி ராமமூர்த்தி பெயர் ஏனோ ராஜினாமா செய்தவர்கள் லிஸ்டில் இடம் பெறவில்லை. 0
0
Reply
தமிழன் - ,இந்தியா
26 ஜூலை,2026 - 16:14 Report Abuse
பதவி விலகினார் என்பதற்கும் போராட்டம் செய்து பதவி விலக்கப்பட்டார் என்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம். 0
0
Reply
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
26 ஜூலை,2026 - 15:03 Report Abuse
அடுத்த வரவிற்கும் காலங்களில் பிஜெபி அரசின் அடுத்த அமைச்சர்கள் ஒருவராக விலக வாய்ப்புள்ளது 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
26 ஜூலை,2026 - 13:47 Report Abuse
முன்பு விலகியவர்கள் பெரும்பாலும் தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து விலகினார்கள் ... பிரதான் அப்படி அல்ல ... 0
0
Reply
Tamilan - ,இந்தியா
26 ஜூலை,2026 - 13:24 Report Abuse
அப்போது விலகியவர்கள் எல்லாம் தாங்களாகவே தார்மீக பொறுப்பேற்று விலகினார்கள். இப்போது பதவியில் ஒட்டிக்கொண்டு நாடே சூறையாடப்பட்டபின்பும் ஒட்டிக்கொண்டு , நாடுமுழுவதை ஒவ்வொருவருடமும் அணைத்து மாணவர்களும் ஏமாற்றப்பட்டு பல சதிச்செயல்கள் சட்டவிரோத செயல்கள் அபரிமிதமாக நாடெங்கும் பாதிக்கும் அளவுக்கு நடக்கும் போதும் கூட யாரும் பொறுப்பேற்காமல், நாட்டுமக்களை வீதிக்கு வந்து கல்லெறியும்வரை தமிழக முதல்வர் படத்தில் வருவதைப்போல தாங்களே துப்பாக்கியேந்தி சுட்டுத்தள்ளும் வரை பதவியில் ஒட்டிக்கொண்டுஇருக்கிறார்கள். அதையும் இதையும் ஓப்பிடலாமா? 0
0
Rio - rio,இந்தியா
26 ஜூலை,2026 - 14:25Report Abuse
காங்கிரஸ் ஆட்சி செய்யும்போது ஊழலால் உச்சம். ஆனால் ஒரு போராட்டம் இல்லை. அப்போ முதுகெலும்பு இல்லை. இப்போ பணம் கத்தார் இருந்து வருது அமெரிக்கால இருந்து வருது . 0
0
Reply
Dum - ,இந்தியா
26 ஜூலை,2026 - 13:22 Report Abuse
அநியாயம் செய்தும் நீதி மன்றம் தண்டித்தும் பதவியில் சிறையில் இருந்தே டொதர்ந்தவன் நம் பாட்டுலுக்கு பத்து ரூவா 0
0
Reply
baala - coimbatore,இந்தியா
26 ஜூலை,2026 - 12:47 Report Abuse
லால் பகதூர் சாஸ்திரி தார்மீக பொறுப்பேற்று அவராக பதவியை விட்டு விளகினார். தர்மேந்திர பிரதான் விலக்கப்பட்டார். 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26 ஜூலை,2026 - 10:15 Report Abuse
லால்பகதூர் சாஸ்திரி கிருஷ்ணமாச்சாரி கிருஷ்ணமேனன் மாதவராஜ் சிந்தியா தர்மேந்ர பிரதான் போன்றவர்கள் ராஜினாமா செய்தவை தார்மீக பொறுப்பேற்று. ஆனால் மற்றவர்கள் ஊழலில் நிறைந்தவர்கள். 0
0
Reply
veeramani - karaikudi,இந்தியா
26 ஜூலை,2026 - 10:00 Report Abuse
ஜனநாயகம் ...
ஒரு சில சமயங்களில் இந்த சொல் கேலிக்கூத்தாக அமைகிறது
பேச்சு , கேட்க்கும் உரிமை வேண்டுதான். ஆனால் லட்சுமண் ரேகை கோட்டை தாண்டும்போது இந்திய குடிமகனின் இதயம் வலிக்கிறது.
எதற்கு எடுத்தாளு போராட்டம் என்றல் இந்திய எப்படி முன்னேறும்.
நமது ஏதிரி நாடுகள் சீனா பாகிஸ்தான் இதை முன்னெடுத்து நடத்தியதாக செய்திகள் உலவருகின்றன
இந்திய இளைனர்கள் சற்று சிந்திக்கவேண்டும்
உலகத்தில் மருத்துவ டொக்டர் படிப்பு மட்டும் இல்லை. அதிக மானவர்கள் போட்டியிடுவதால் NEET தேர்வு மூலம் தேர்வு செய்தாகவேண்டிய கட்டாயம் .
ஏன் விசாயம் சார்ந்த ப டிப்புகளுக்கு மாணவர்கள் அப்ளை பண்ணுவதேயில்லை. இங்கு மண்ணில் கால்வைத்து பகல் முழுவதும் உழைக்கவேண்டும்
அனைவரும் ஏசி ரூமில் வேலை பார்க்க எண்ணினால் சாப்பாடு எவ்வாறு கிடைக்கும்
சிந்தியுங்கள் மாணவர்களே ........................ 0
0
Murugan - ,
26 ஜூலை,2026 - 18:18Report Abuse
don't induce backward thinking student feature perpection 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
26 ஜூலை,2026 - 09:49 Report Abuse
There is a thing called 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement