கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

செஞ்சி: கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று மதியம் ஆலம்பூண்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பைக்கில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சுப்ரமணி மகன் சுபாஷ், 28; என்பவரை கைது செய்து, 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement