அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தம்; கச்சா எண்ணெய் விலை சரிவு
நமது நிருபர்
அமெரிக்காவும், ஈரானும் தங்கள் தாக்குதல்களை நிறுத்தியதை அடுத்து எண்ணெய் விலைகள் குறைந்தன.
சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்படுமோ என்ற அச்சம் தணியாததால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் துவங்கியதை தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக அதிகரித்து வர்த்தகம் ஆகி வந்தது. தற்போது கடந்த 13 நாட்களாக நடந்து வந்த இந்த தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார். புதிய தாக்குதல் நடத்தும் திட்டம் தயாரிக்கப்பட்ட போதிலும் நிறுத்திவைக்கும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.
இதன் எதிரொலியாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் பேரலுக்கு 5 டாலர்கள் குறைந்துள்ளது. தற்போது ஒரு பேரால் 88.03 டாலர்களுக்கு விற்பனையாகிறது.
குறைஞ்சா என்ன கூடுனா என்ன இந்தியாவில் விலையை குறைக்க அம்பானி ஒத்து கொள்ள வில்லை .
இவனுக 2 பேருக்கும் வேறு வேலை இல்லை போல் தெரிகிறது. நினச்சா வாடா சண்டைக்குன்னு 2 பேரும் முஷ்டியை மடக்கறாங்க திடீர்னு தோல் மேல கைய்ய போட்டுக்கிட்டு நாங்க 2 பேரும் நண்பர்களாயிட்டோம்னு காட்டிக்கறாங்க. என்னடா பண்றீங்க? .
இரான் அதிபரும் அமெரிக்க அதிபரும் பங்கு சந்தை ஊகவணிகத்தில் பார்ட்னர் போல தெரியுதே
கச்சா எண்ணெய் விலை குறைஞ்ச மட்டும் இங்கே என்ன நடக்கப்போகுது? 5 பைசா கூட இந்தியாவில் விலை குறையாதுமேலும்
-
வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்
-
பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா; அமளிக்கு இடையே லோக்சபாவில் தாக்கல்
-
உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கணும்; அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை உறுதி
-
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி... 5 பேர் படுகாயம்
-
போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு