மாரியம்மன் கோயில் பூக்குழி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாகச் சென்ற பக்தர்கள், அம்மன் கோயில் முன்பு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

பின்னர் மூலவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

Advertisement