புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது.
குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றுள்ளனர்.
ஆன்மிக சிந்தனைகள்
காலத்தால் அழியாத பாரம்பரியத்தை போற்றும் பக்தி, ஆன்மிக சிந்தனைகள் மற்றும் கூட்டு வழிபாட்டுடன் தெய்வீக ஆசிரியரும், நித்திய வழிகாட்டியுமான பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது. குல்வந்த் அரங்கம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவானது காலை 8 மணிக்கு வேத பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 8:20 மணிக்கு பிரசாந்தி பஜன் குழுவினரின் பக்தி இசை பிரசாதம் 'குரு வந்தனம்' நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி ஸ்ரீ எஸ்.எஸ்.நாகானந்த் வரவேற்புரையில், பகவானின் போதனைகளையும், பகவத் கீதை உட்பட வேதங்களில் உள்ளவற்றையும் மேற்கோள் காட்டி, சத்குருவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். காலை 9:10 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையாற்றினார்.
மங்கள ஆரத்தி
காலை 9:20 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மொபைல் மருத்துவமனையின் புதிய வசதி திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:25 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு மற்றும் பஜனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான் சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையில்.. நாடு தழுவிய 'பிரேம பிரவாஹினி' முன்னெடுப்பு குறித்துப் பேசினார்; ஏகலைவன், நசிகேதன் மற்றும் அர்ஜுனன் உடனான கிருஷ்ண பரமாத்மா போன்ற காலத்தால் அழியாத குரு சீடர் உறவுகளைக் குறிப்பிட்ட அவர், நம்பிக்கை, சரணாகதி மற்றும் ஐயமற்ற கீழ்ப்படிதல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
கிராமப்புற மக்களுக்கு இலவச மற்றும் தரமான மருத்துவ சேவையை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் பகவானின் உன்னதப் பணியில் ஒரு முக்கிய அங்கமாக, புதிதாக வடிவமைக்கப்பட்ட 'ஸ்ரீ சத்ய சாய் நடமாடும் மருத்துவமனையின் தொடக்க விழாவும் இன்று காலை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய டாக்டர் கே. நரசிம்மன் (இயக்குநர், ஸ்ரீ சத்ய சாய் நடமாடும் மருத்துவமனை), மருத்துவ வசதிகளைப் பெற இயலாதவர்களையும் சென்றடையும் வகையிலான பகவானின் தொலைநோக்குப் பார்வையிலான மருத்துவச் சேவைத் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
350க்கும் மேற்பட்ட தன்னார்வ மருத்துவர்களின் பங்களிப்புடன் செயல்படும் இந்த நடமாடும் மருத்துவமனை, அவ்வப்போது நடத்தப்படும் மருத்துவ முகாம்களாக மட்டுமின்றி, தினமும் கிராமங்களுக்குச் சென்று சேவையாற்றுவதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலையும் ஆன்மிகத்தையும் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது.
இம்மருத்துவமனையில் உள்ள விரிவான பரிசோதனை வசதிகள் மூலம் நோயாளிகள் தங்கள் சொந்த கிராமங்களிலேயே பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதையும், அதிலேயே உள்ள மருந்தகத்தின் மூலம் மருந்துகள் உடனடியாக வழங்கப்படுவதையும் அவர் விளக்கினார்.
தொடர்ந்து தெய்வீக சொற்பொழிவு மற்றும் பஜனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான் சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்து வருகின்றனர்.
சத்திய சாய்பாபா உங்கள் ஆசி உள்ள நாங்கள் நன்கு இருப்போம்
உண்மையான சமத்துவம், சமநீதி போதித்த மஹான், கோடிக்கணக்கான எல்லா மத பக்தர்களையும் உலகளவில் கவர்ந்த ஷீர்டி பாபாவின் அவதாரமான பகவான் சத்ய சாய் பாபாவின் அரசுக்கும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர் வழங்கிய போதனைகள் பின்பற்றினால் எவர்க்கும் நன்மை அளிக்கும். முந்தைய முதல்வர் அவரின் ஆசி பெறுவார், ஆனால் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. சாய்ராம்.
AKமேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்