ஆர்ப்பாட்டம்   

சிவகங்கை, ஜூலை 29-

மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை நீக்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சப்பாணிமுத்து கோரிக்கையை விளக்கி பேசினார். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் பாண்டி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் செல்லமுத்து நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் உதயசங்கர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement