ரேஷன் கார்டில் பெயர் மீண்டும் மீண்டும் நீக்கம்

கோவை: இறந்த கணவரின் பெயரை ரேஷன் அட்டையில் நீக்கக் கோரிய நிலையில், உயிருடன் இருக்கும் பெயரை நீக்கியதால், ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் தாராபாய் என்பவர் மனு அளித்தார்.

 தாராபாய் கூறுகையில், “2019ல் கணவர் இறந்தார். ரேஷன் கார்டில் அவர் பெயரை நீக்க மனு அளித்தேன். எனது பெயரை நீக்கிவிட்டனர். அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதில் இல்லை. கலெக்டரிடம் மனு அளித்ததை தொடர்ந்து பிரச்னையை சரிசெய்து, கடந்த ஆக., வரை ரேஷன் பொருட்கள் பெற்று வந்தேன். தற்போது மீண்டும் எனது பெயரை நீக்கியுள்ளனர். இதுகுறித்து வட்டார ரேஷன் அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால், மீண்டும் கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்,” என்றார்.

Advertisement