பைக் மீது லாரி மோதி பெயின்டர் பரிதாப பலி



நாமகிரிப்பேட்டை; ராசிபுரம், குமாரசாமி தெருவை சேர்ந்தவர் ஜலா-வுதீன், 51; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, ஆத்துார் மெயின் ரோட்டில், நாமகிரிப்-பேட்டை அண்ணா வாரச்சந்தை அருகே டூவீ-லரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த லாரி, எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இதில் கட்டுப்-பாட்டை இழந்த டூவீலர் லாரியின் இடது பக்க சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளா-னது.


இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஜலாவுதீன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஜலாவுதீனின் மனைவி குல்ஜார், 51, அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, துக்கலாம்பட்-டியை சேர்ந்த அண்ணாதுரை, 32, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement