தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்; சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தத்தில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல் ஏற்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுப்பதை சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (9)
Karthik - Dindigul,இந்தியா
31 ஜூலை,2026 - 11:48 Report Abuse
நீங்க 5 வருஷம் ஆட்சி செய்த இலட்சணம் உங்க பியூஸ்- ஐப் புடிங்கிட்டாங்க. 0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
31 ஜூலை,2026 - 11:38 Report Abuse
காங்கேயம் சுற்றிலும் மின்சார பிரச்சனை தான். நீங்க வந்தவுடன் ஆரம்பித்தது எப்படியோ சரிசெய்து விட்டீர்கள். அந்த டெக்னீக் விஜய் க்கு சொல்லவும். வெளி மாநிலத்திற்கு கணக்கில் இல்லாமல் கொடுக்கிறார்கள் அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. சொல்லி கொடுங்கள். கணக்கில் இல்லாமல் செல்லும் மின்சார ஒயரை எப்படி கட் செய்வது 0
0
Reply
GRK - Bengaluru,இந்தியா
31 ஜூலை,2026 - 10:24 Report Abuse
அதான் அமைச்சர் சொன்னாங்கள்ல சார் ,யாரோ பகல்ல பியூஸ் கேரியர புடுங்கிட்டு போயிடுறாங்க அதுனாலதான் நைட்ல கரண்ட் இல்லைன்னு . நிச்சயமா இது திமுக சதிதான் . என்னத்த சொல்றது பொறுப்பற்ற கட்சிக்கு ஓட்டு போட்டா இப்படி அனுபவிச்சுதான் ஆகணும். 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
31 ஜூலை,2026 - 10:01 Report Abuse
கடந்து வந்த பாதையை நினைவு படுத்தவேண்டும். 0
0
Reply
kjpkh - ,இந்தியா
31 ஜூலை,2026 - 09:37 Report Abuse
2021 இல் உங்கள் ஆட்சி அமைந்த போது எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. அதற்கு செந்தில் பாலாஜி என்ன சொன்னார் என்பதை கொஞ்சம் நினைவில் நினைத்துப் பாருங்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் உள்ளதும் போய்விடும் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
31 ஜூலை,2026 - 08:35 Report Abuse
அப்பா , பிள்ளைகளிடம் எடுத்துக்கிட்டு போகும் பீஸ் கட்டைகளை திருமா கொடுக்க சொல்லுங்க . இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கீடு செய்ய 100 பணியாளர்கள் தேவை என்றால் மாதாமாதம் மின்கணக்கிட 200 பணியாளர்கள் தேவை படும் என்று ஒரு ராக்கெட் விஞ்ஞான கணக்கைசென்ற ஆட்சியில் வெளியிட்டிர்கள். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்பார்த்து கேட்ட தொகை கிடைக்காதலால் அதையும் நடைமுறைப்படுத்தவில்லை. யாராக இருந்தாலும் லாப நஷ்ட கணக்கு பாப்பாங்கள்ல 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
31 ஜூலை,2026 - 08:19 Report Abuse
உங்க பி டீம்தானே ?? அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போங்க ..... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
31 ஜூலை,2026 - 08:19 Report Abuse
ஏன் தவெக ஆட்சியில் மின்வெட்டு ஏற்படுது ?? உங்க ஆட்சியில் புதிய மின்திட்டங்கள் கொண்டுவரப்படாத அநீதிதானே ?? தமிழர்களைக் கேனைகளாக எண்ணாதீர் ...... 0
0
Reply
பிரேம்ஜி - ,
31 ஜூலை,2026 - 07:47 Report Abuse
ஆமாம். மே 4, 2026 காலை 11 மணியளவில் தான் மின்வெட்டு ஆரம்பம் ஆனது! இன்னும் தொடர்கிறது! அப்பா ஆட்சி வந்தால் மட்டுமே பிரச்சினை தீரும்! 0
0
Reply
மேலும்
-
அணைகள் நீர்ட்டம்
-
செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகல்
-
ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
-
மோசமான வானிலை; திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்... பயணிகள் அவதி
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; முடங்கியது பார்லிமென்ட்
-
பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்
Advertisement
Advertisement