எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; முடங்கியது பார்லிமென்ட்
நமது டில்லி நிருபர்
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி துவங்கியது. அவை துவங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீதான தடியடி சம்பவம் உள்ளிட்டவற்றை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் கூடி நடந்து வருகிறது. இரு அவைகளிலும் பெரும்பாலான நேரங்களில் எந்த அலுவல் பணிகளும் நடக்காமல் முடங்கி வருகின்றன.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 31) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். மீண்டும் 12 மணிக்கு அவை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபா
அதேபோல் ராஜ்யசபாவிலும் காலை 11 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
சபையை நாள் முழுவதும் அவை தலைவர் ஒத்திவைத்தார். நாளை, நாளை மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மீண்டும் அவை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு கூடும்.
@block_G@
பார்லிமென்ட்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. எந்தவொரு விவாதத்தையும் நடத்தவிட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. இதனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதிலும், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டதால், ஏற்பட்ட நிதியிழப்பும், ஜனநாயக பின்னடைவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தொகுதி பிரச்னைகளையும், நாட்டின் முக்கிய விவகாரங்களையும் எம்.பி.,க்களால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை. இரு சபைகளும் முடங்குவதால் ஒருபுறம் மக்களின் வரிப் பணம் வீணாவதுடன், மறுபுறம் மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழலும் ஏற்படுகிறது.block_G
ஒரு நாள் முழுவதும் குரங்குகள் விளையாடட்டும். சி சி டிவி யில் அடையாளம் கண்டு கூண்டில் அடைத்தால் அன்றோடு இந்த தமாஷ் முடிந்து விடும்
ஸ்கூல் குழந்தைகள் போன்று கத்தி கூச்சல் போடும் எதிர்கட்சியினரை ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்துவிட்டு ஜனநாயகத்தை பாதுகாத்து அவையை நடத்துங்கள். எதிர்க்கட்சிகள் இந்தியாவின் எதிரிக்கட்சிகள்.
வரிப்பணம் மிச்சமாகும்.
மார்ஷல்கள் மூலம் ஊமைக்காயம் ஏற்படுத்தி விரட்டி விடலாம்... ஆனால் டெல்லியில் எந்த கான்டீன் ஹோட்டல் டீக்கடை பக்கமும் அண்டவிடக்கூடாது.அடித்து விரட்டி விட வேண்டும்
இந்த அமளி எல்லாம் FCRA சட்டத்திருத்தம் கொண்டு வராமல் செய்யலாம் என்ற நப்பாசையில் தான் . அதையும் மக்களவை மருவரையறை டே-limitation சட்டத்தையும் இத்தொடரில் எப்படியும் நிறைவேற்றியே தீருவார்கள்
இதுபோல வேண்டுமென்றே கலாட்டசெயறவாளை சிறையேபோடவேண்டும் +எம்பி சம்பளமும் தரவேகூஓடாது அப்பா தான்ADANGKUVAANUKA
சஸ்பெண்ட் செய்யலாம்! அமளி ரவுகளுக்கு சம்பளம் பிற சலுகைகள் கிடையாது என்று சட்டம் இயற்றலாம்!
543 ஐ சுருக்கி 100 எம்.பிக்களாகக் குறைத்து விடலாம், மாநிலத்திற்கு 3 அல்லது 4 என்ற அடிப்படையில்.
நம்மூரு 40-பெருச்சாளிகள் பார்லிமென்ட் கான்டீனையே கபளீகரம் செய்திருப்பார்களே மக்களும் ஒட்டுப் போடுகிறார்களே, அவர்களுக்கு, அதைத்தான் சொல்லணும்.
எல்லாம் நம் தலையெழுத்து.
சபாநாயகர் மிகவும் பலமற்றவராக செயல் படுகிறார். ஏன் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களை , 20 பேரை பார்லிமென்டிற்குள் வராமல் , சஸ்பெண்ட் செய்யக்கூடாது. சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சபையை நடத்த வேண்டும்மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை