அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது; ஈரான் திட்டவட்டம்
டெஹ்ரான்: ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஹார்முஸ் ஜலசந்தி எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது; அமெரிக்கா மத்திய கிழக்கு நாட்டைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வரை அந்த முக்கிய ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்துள்ள போர், நான்கு மாதங்களை தாண்டியும் தொடர்கிறது. போர் நிறுத்தம், அமைதி ஒப்பந்தம், பேச்சு என பல முயற்சிகள் நடந்தபோதும், இரு தரப்பும் மாறி மாறி தாக்கி வருகின்றன. இந்த போரின் முக்கிய புள்ளியாக விளங்குவது, ஈரான் மற்றும் ஓமனை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி. உலக அளவிலான கடல்சார் கச்சா எண்ணெய் போக்குவரத்தில், 20 சதவீதம் இந்த பாதையிலேயே நடக்கிறது.
கடந்த வாரம் முழுவதும் நடந்த தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும், ஈரானும் தனித்தனியாக பிரகடனப்படுத்தி உள்ளன. தற்போது அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வது தொடர்பான முடிவு ஈரானிடமே உள்ளது.
அதேவேளையில், அமெரிக்காவிற்கு உதவும் நாடுகள் தங்கள் நடத்தையைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் நிலம். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த ஒரு அந்நியர் தலையிட அனுமதிக்கப்பட மாட்டார். சர்வவல்லமையுள்ள இறைவனின் உதவியுடன், ஆக்கிரமிப்பு செய்தவர் இன்று தண்டிக்கப்படுவார்.
அமெரிக்க அதிகாரிகளின் மிகைப்படுத்தல்களும், அச்சுறுத்தல்களும், பிராந்தியத்தில் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது. மேலும், அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் நிலைமையை மேலும் கடினமாகவும் சிக்கலாகவும் மட்டுமே ஆக்கும். இவ்வாறு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (5)
MUTHU - Sivakasi,இந்தியா
31 ஜூலை,2026 - 09:34 Report Abuse
அமெரிக்காவிற்கெதிரான ஈரானின் தோல்வி உலக நாடுகளின் தோல்வி. அமெரிக்கா உலகத்திற்கு நல்லது செய்வதற்கு ஒன்றும் ஈரானை முற்றுகையிடவில்லை. அதன் எண்ணைய் வளத்திற்கு ஏகபோகம் கேட்கின்றது. வெனிஸுலா போல் ஈரானும் மடங்கினால் அமெரிக்கா வைத்ததுதான் எண்ணை சந்தை என்றாகிவிடும். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
31 ஜூலை,2026 - 08:40 Report Abuse
Big blow to IRGC In one of the biggest strike against Iran, US forces targeted dozens of IRGC targets using 100 plus Missiles in Khorramshahr, Abadan, B@ndar e Mahshahr, Nurabad, Bushehr, Qeshm Island, B@ndar Abbas, Sirik and Ahvaz. Majorly ammunition depot 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
31 ஜூலை,2026 - 08:36 Report Abuse
America வுக்கு நிலையான mindset கிடையாது போல. கொஞ்ச நாளைக்கு முன் பத்திரிகைகளில் முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டு பின் ஓரிரு நாளிலேயே மறைமுகமாக தாக்குவது. ரொம்ப கேவலமான America 0
0
Reply
SUBBU,MADURAI - ,
31 ஜூலை,2026 - 08:30 Report Abuse
ஈரானில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியத்தைக் கோரி போராடியதற்காக, கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் இஸ்லாமிய ஆட்சியால் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் மீது அனைவரின் பார்வையும் வைத்த மனித உரிமை கும்பலிடையே ஏதேனும் சீற்றத்தைக் கண்டீர்களா? நினைவில் கொள்ளுங்கள், தீவிர இஸ்லாமியவாதிகள் மற்றும் இடதுசாரிகளின் கூட்டணியே மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
31 ஜூலை,2026 - 08:23 Report Abuse
அமெரிக்காவின் இரவு நேரத் தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்பை ஈரான் ஒத்துக்கொண்டது. ஈராக்கில் உள்ள மக்கள் திரள் படை (PMF) நிலைகள் மீது அமெரிக்காவும் சவூதியும் நடத்திய தாக்குதல்களில், ஐந்து IRGC ஆலோசகர்களும், PMF ன் 18 உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது இறந்தவர்களின் சவப்பெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இனிமேலாவது ஈரான் பிடிவாதம் பிடிக்காமல் ஹோர்முஸ் ஜலசந்தியை எவ்வித நிர்பந்தமும் இன்றி திறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் இந்தியா உள்ளிட்ட அதனுடைய நட்பு நாடுகளின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியதிருக்கும். முக்கியமாக இந்தியாவிடம் இருந்து ஈரானுக்கு இறக்குமதியாகும் அரிசி, கோதுமை, தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களை இந்தியா படிப்படியாக குறைக்க நேரிடும்.
பிறகு ஈரானில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு அந்நாட்டு மக்கள் அவதிப்பட நேரிடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஈரான் தன் பிடிவாதத்தை தளர்த்தி எப்பவும் போல் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும். 0
0
Reply
மேலும்
-
அணைகள் நீர்ட்டம்
-
செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகல்
-
ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
-
மோசமான வானிலை; திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்... பயணிகள் அவதி
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; முடங்கியது பார்லிமென்ட்
-
பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்
Advertisement
Advertisement