தவெக ஆட்சிக்கு வந்தபின் 95 சதவீதம் ஊழலை ஒழித்து விட்டோம்; அமைச்சர் நிர்மல்குமார்
நமது சிறப்பு நிருபர்
''இன்று, நாம் 95% ஊழலை ஒழித்துள்ளோம்; எரிசக்தித் துறையில் ரூ.2,500 கோடி மதிப்பிலான 45 டெண்டர்கள் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இது குறித்து நிர்மல் குமார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முந்தைய ஆட்சி காலத்தில் அரசுத் திட்டங்களுக்கான அனைத்து ஒப்புதல்களும் 'கட்சி நிதி' என்ற பெயரில் லஞ்சம் கொடுத்த பின்னரே வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர்களும் இந்த ஊழலின் பின்னணியில் ஒரு பகுதியாக இருந்தனர்,
இதன் விளைவாக அரசு செலவழித்த பணத்தில் 40% இழப்பு ஏற்பட்டது. தவெக அரசை அமைத்த பிறகும், ஊழல் இருந்ததால் கோப்புகள் நகரவில்லை. கோப்புகளுக்கு ஒப்புதல் பெறவே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்று, நாம் 95% ஊழலை ஒழித்துள்ளோம்.
நடவடிக்கை
எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. எரிசக்தித் துறையில் ரூ.2,500 கோடி மதிப்பிலான 45 டெண்டர்கள் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குறுதிகளை முதல்வர் விஜய் நிறைவேற்றுவார். முன்னதாக ரூபாய் 1 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்ட ஒரு பணி, இன்று 28 ஆயிரம் ரூபாய்க்கு செயல்படுத்தப்படுகிறது.
பழிவாங்கல் அல்ல
விதிமுறைகளை மீறிய பல டெண்டர்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். எட்டு மாதங்களுக்குள் ஆட்சி கணிசமாக நிலைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
தவெக அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதில்லை. சட்டப்படி செயல்பட போலீசாருக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறோம், அவ்வளவுதான். விதிமீறல்களையோ அல்லது அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களையோ அவர்கள் கண்டறிந்தால், அவர்கள் வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
விலக்கு
நீட் தேர்வு குறித்த எங்கள் நிலைப்பாடு ஒருபோதும் மாறியதில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொடர்ந்து கோரி வருகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
@quote@மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்லும் திட்டத்தைக் கைவிடுமாறு எதிர்க்கட்சிகளும், சில கூட்டணிக் கட்சிகளும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளன.quote நிரந்தரத் தீர்வைக் காண பேச்சுவார்த்தை முக்கியம் என்று எங்கள் முதல்வர் நம்புகிறார். பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு அவர் இறுதி முடிவை எடுப்பார்.
ஆலோசனை
முதல்வர் விஜய் நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் நாங்கள் ஆராய்வோம். எங்கள் கூட்டணி விரைவில் வடிவம் பெறும். எங்கள் கூட்டணிக் கட்சிகள் அரசின் ஒரு பகுதியாக உள்ளன, மேலும் கூட்டணி அரசு சுமூகமாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். யார் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது தேர்தலுக்கு நெருங்கிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.
உரிமை உண்டு
அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இடதுசாரிக் கட்சிகள், விசிக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுடன் எங்களுடையது ஒரு இயல்பான கூட்டணியாகும். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உண்டு. நாங்கள் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருக்கிறோம். முந்தைய திமுக அரசைப் போலல்லாமல், நாங்கள் சர்வாதிகார அணுகுமுறையில் நம்பிக்கை கொள்வதில்லை.
முதலீடுகள்
பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன, மேலும் பல நிறுவனங்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் நடைபெறுகின்றன.
தொழில்துறை வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஊழலற்ற அமைப்பு ஆகியவற்றை அவர்களுக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம். இரண்டு மாதங்களில் அந்தப் பேச்சுவார்த்தைகள் முதலீடுகளாக உருவாவதை நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
வாயாலேயே?
ஊழலை ஒழித்துள்ளோம் ஊழலை ஒழித்துள்ளோம் ஊழலை ஒழித்துள்ளோம் எங்க ஒழித்தீர்கள். சாமானிய மனுசனா அரசு அலுவலங்கங்களுக்கு சென்று பாருங்கள். ஊழலை ஒழித்துள்ள லட்சணம் தெரியும். வருவாய் துறை உள்ளாட்சி துறைகள் சென்று பார்த்தால் தெரியும் நீங்க ஒழித்த ஊழல் எப்படி தலை விரித்து அடுத்து என்று. ஆட்டோமேட்டிக் அப்ப்ளிகேஷன் ப்ரோஸ்ஸ் கொண்டு வரவேண்டும். அதிலும் சரியான டாக்குமெண்ட் இணைக்கவில்லை என்று மக்களை அவர்கள் வேண்டுமென்ற அலை கழிக்க கூடாது. நேர நிர்ணயம் செய்ய வேண்டும். மொத்ததில் மக்களை அரசு அலுவலங்கங்களுக்கு வர வைக்கமால் ஆன்லைன் மூலமாகவே நேர நிரனயம் செய்து விண்ணப்பங்களை விரைவாக தீர்வு கண்டால் ஓரளவுக்கு லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
ஒவர் சீன் போட்ட படமும், ஓவர் சீன் போட்ட அரசியலும் உதாரணமா நம்ம விடியலை எடுத்துகோங்க ஜெயிச்சதா சரித்திரம் இல்லைங்கண்ணே
ஊழல் ஒழிந்ததா என்று மக்கள் சொல்ல வேண்டும் அமைச்சரே. ஓவர் சீன் ஆட்சிக்கு ஆகாது
பொய்
பத்திர எழுத்தர்கள் , மற்றும் பேங்க் வைத்திருக்கும் இடைத்தரகர்கள் இன்னமும் பணம் பெற்றுக்கொண்டுதான் உள்ளார்கள். வங்கிகளை வாங்கும் எல்லா பணத்துக்கும் ரசீது கொடுக்க சொல்லுங்கள்
அமய்சர் எம் எல்ஏ பதவிள இறுந்து றாஜிநாமா சேய்து விட்டு ஈபி கநக்சண்,டிரய்விங லய்சண்ஸ் பட்டா இப்படி எதையாவது லஞ்சம் குடுகாமள் செய்து காமிக வேன்டும் நிறுமளு
என்ன நைட் ரொம்ப ஓவரா?
சதவிகித கணக்கு நீங்கள் சொல்வதுதான். இதே மாதிரியான சதவிகித கணக்கு போன ஆட்சியிலும் சொல்லப்பட்டது. சென்ற முறை போலவே அசிங்கப்பட்டு போவீங்க. பேச்சை குறையுங்கள். சிறியது ஊழல் பெரியது தவறு என்று விளக்கம் கொடுப்பதும் உங்க கட்சிதான்.
நல்ல நகைச்சுவை வெய்யில் அதிகமாக உள்ளது அதிமுக வில் இருந்து உள்ளே வந்த ஊழல் அமைச்சர்கள் முன்னாள் மீது என்று நடவடிக்கை ..பெருச்சாளிகள் கட்டுச்சோறு உள்ளே ..நல்ல காமெடி
அமைச்சர் அவர்கள் மார்தட்டிக்கொள்ளுமளவிற்கு ஊழல் ஒழிக்கப்படவில்லை, ஊழல் செய்தவர்களும் தண்டிக்கப்படவில்லை. ஆகவே நிறைகுடமாக இருந்து, சாதித்தபிறகு பெருமைகொள்ளலாம்.மேலும்
-
அணைகள் நீர்ட்டம்
-
செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகல்
-
ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
-
மோசமான வானிலை; திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்... பயணிகள் அவதி
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; முடங்கியது பார்லிமென்ட்
-
பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்