நாட்டுக்கோழி விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, சந்தையூரில் வாரச்சந்தை நடந்தது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நேற்று கூடிய சந்தையில் ஆடி 18ஐ முன்னிட்டு, ஆடு, கோழிகள் விலை உயர்வுடன் விற்பனை நடந்தது. 8 கிலோ கொண்ட ஆடு, 8,500 ரூபாய் விற்றது. நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாயில் இருந்து, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டுக்கோழி விலை உயர்வு மூலம், விவசாயி
களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது.

Advertisement