ஜாமினில் தலைமறைவானவர்   2 ஆண்டுக்கு பின் கைது 

நெய்வேலி: நெய்வேலியில் திருட்டு வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவான வாலிபரை 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர். 

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்,37; இவரை, கடந்த 2006ம் ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து, நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பண்ருட்டி சிறையில் அடைத்தனர். 

வழக்கு விசாரணை நடந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த கார்த்திக், கடந்த 2 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மந்தாரக்குப்பத்தில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்து, பண்ருட்டி சிறையில் அடைத்தனர். 

Advertisement