வர்த்தகம் இருமடங்காக வேண்டும்

இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையிலான வர்த்தகம் தற்போது சுமார் 150 கோடி அமெரிக்க டாலர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். இதற்காக, இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களும் பரஸ்பரம் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

ஐ.டி., மனிதவளம், டிஜிட்டல் பொது கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியா வலுவாக உள்ளது. அதேநேரத்தில், சுரங்கம் மற்றும் பருத்தி உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் உஸ்பெகிஸ்தானில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இரு நாடுகளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பரிசீலிக்கலாம்.



- பியூஷ் கோயல்


மத்திய வர்த்தக அமைச்சர்

Advertisement