கல் குவாரிகளை மூடக்கோரி பா.ம.க., முற்றுகை போராட்டம் 

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியம், குண்டலப்புலியூர், காணை, நங்காத்தார், அதனுார் ஆகிய பகுதிகளில் கனிம வளங்களை சுரண்டும் கல் குவாரிகளை மூட வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசக்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செந்தில் வரவேற்றார்.

மாநில இளைஞரணி துணை தலைவர் வரதராஜ், ஊடக பிரிவு மாநில செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வகுமார், ஏழுமலை, மோகன், ஜெயராஜ், சிவசக்தி, ஜெயபிரகாஷ், ரமேஷ், சுரேஷ், ராஜா, சதாசிவம், துரை, ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement