பள்ளி மாணவிகளுக்குதற்காப்புகலை பயிற்சி

தேனி, ஆக.5–மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 13,594 மாணவிகளுக்கு தற்காப்புகலை பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு கலைகள் சில ஆண்டுகளாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 173 அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை படிக்கும் சுமார் 13,594 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு ஆக., முதல் நவ.,வரை வாரத்திற்கு இரு வகுப்புகள் நடைபெறும். பயிற்சியாளர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்படுவார்கள்.

Advertisement