குடிநீர் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்

1

காங்கயம்: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட, 13 வது வார்டு அண்ணா நகரில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், தாராபுரம் ரோட்டில் களிமேடு பஸ் ஸ்டாப் அருகில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காங்கயம் போலீசார் பேச்சு நடத்தினர். உடனடியாக ஆழ்துளை கிணறு குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். இதனால், மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement