பத்ரகிரி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
சிக்கமகளூரு: பத்ரகிரி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று பரணி காவடி திருவிழா நடக்கிறது.
சிக்கமகளூரு மாவட்டம் பத்ரகிரியில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த 1ம் தேதி ஆடி கிருத்திகை காவடி திருவிழா துவங்கியது. இத்திருவிழா வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.
இன்று (5ம் தேதி) பரணி காவடி திருவிழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு சாந்தி பூஜை; 9:00 மணிக்கு சிறுகாலை சாந்தி பூஜை; மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை; மாலை 5:30 மணிக்கு தீபாராதனை; இரவு 9:00 மணிக்கு இரவு கால பூஜை; நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.
நாளை (6ம் தேதி) ஆடிக்கிருத்திகையை ஒட்டி, அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூபதரிசனம்; 5:00 மணிக்கு விளா பூஜை; 8:00 மணிக்கு காலை சந்தி பூஜை; 9:00 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை; மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை; மாலை 5:30 மணிக்கு தீபாராதனை; இரவு 11:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 08282 - 267206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது