விபத்தில் சிக்கிய முதியவர் பலி

பண்ருட்டி: விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பண்ருட்டி அடுத்த புலவன்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,61; விவசாயி; இவர் கடந்த 31 ம்தேதி மாலை  புலவன்குப்பத்தில் இருந்து நெய்வேலிக்கு  தனது மொபட்டில் புறப்பட்டார். அவருடன், வடக்கு இருப்பு கிராமத்தை சேர்ந்த கதிரேசன் சென்றார்.

எலவத்தடி அரசு வனப்பகுதி அருகே சென்றபோது, மொபட் ஓட்டி சென்ற ராஜேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை, கதிரேசன் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் காலை இறந்தார்.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement