பிரதமர் குறித்த ஏ.ஐ., அவதூறு வீடியோ; மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை
புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிரான ஏஐ அவதூறு வீடியோ மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் தொடர்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கு உறுதியளிக்கும் விதமாக, பிரதமர் மோடி பேசிய செல்பி வீடியோ, அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சிறிது நேரம் முடக்கப்பட்டதால் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்னை எனக் கூறி, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.
ஆனால், இந்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி, அதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிராகரித்தது. மேலும், டில்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் ஆஜராகுமாறு மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு நடக்கவில்லை எனில், பாதுகாப்பு சலுகைகள் வழங்க முடியாது என்று மெட்டா நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான பார்லி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜ எம்பியும், பார்லி குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே, தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான அவதூறு ஏஐ வீடியோக்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் மீது தெலுங்கானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, நிதி மோசடி செயலிகள் தொடர்பாக கூகுள் மீது ஹைதராபாத் போலீஸ் பதிவு செய்துள்ள வழக்குகளுக்கு, இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வலைதளங்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படாது. இந்தச் சமூக வலைதளத் தளங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இழுத்து மூடுங்க பாப்போம்.
எது சுதந்திரம்
BJP needs Meta more than Meta needs BJP.
இவனை தடை செய்யுங்கள்
அந்த வீடியோவை பிரதமரின் அலுவலகமே நீக்கி விடலாம். அத வைத்து சின்னப் பசங்க கூட வெரைட்டி வெரைட்டியா ரீல்ஸ் போட்டு செம கலாய் கலாய்க்கிறாங்க ஃப்ரண்ட்ஸ்ஸ்.
அது ஃப்ரண்ட்ஸ்ஸ் இல்லை.,.. ஃபிரான்ஸ்ஸ்... பகோடாஸ் கோச்சுப்பாங்கல்ல...
ஏலேய் வெத்து விருமாண்டி, பாமர பக்கோடா நீங்க இரண்டு பேரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாவதை பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு
பொது வெளியில் தகவல் வெளியிடும் நபர் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மூலம் நிரந்தர பதிவு எண் பெற வேண்டும். ஒவ்வொரு சோசியல் மீடியா வீடியோவில் அந்த எண் பதிவாக வேண்டும். இதில் தவறு நிகழ்ந்தால் மெட்டா நிறுவனம் பொறுப்பு. பொது அமைதி கெடுக்கும், வன்மம், ஆபாச வெளியீட்டாளர் ஜாமினில் வெளி வரமுடியாத குண்டர் சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும். எச்சரிக்கை யாரும் பயப்பட மாட்டார்கள்.
மெட்டா வலதுசாரிகளுக்கு எதிரானது .......
உங்க எச்சரிக்கை எல்லாத்தையும் தூ துப்பிட்டு போயிருவா .ரெண்டு நாள் முடுக்குங்க சரியாப்போரும் வழிக்கு வந்திருவான் ஆனா நீங்க முதுகெலும்பில்லாத ஜடங்கள்னு இந்நேரம் ராகுல் சொல்லிருப்பார் ... ...ஒரு ஆளுமையும் கிடையாது ...
வஉசிப்பிவிட்டா ஆட தெரிந்தா ஒரே ஐந்து ராகுல் மட்டுமே
நமது பாரத பிரதமரை அவதூறு செய்யும் வகையில் இன்னமும் பல டில்ஸ்கல் வந்து கொண்டு தான் இருக்கின்றன இந்துக்கள் ஏதாவது ஒரு சிறு வார்த்தையை தவறாக உபயோகித்தால் உடனே பிளாக் செய்யும் மெட்டா நிறுவனம் அன்னிய மதத்தினர் எவ்வளவு கேவலமாக எழுதினாலும் அதனை கண்டு கொள்வதில் ஏன் மத்திய அமைச்சர் முருகன் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரா என்று தோன்றுகிறது
மேட்டா நிறுவனத்தை பத்து நாட்களுக்கு இந்தியாவில் நிறுத்தி வையுங்கள். சரியாகி விடும். டெல்லி கலவரங்களுக்கு இவர்களும் உடந்தை. இவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுங்கள்.
பத்து நாளைக்கி வாட்ஸ்அப் இல்லைன்னா அப்புறம் உங்க பாஜக வாட்ஸ்அப் உருட்டு யுனிவர்சிட்டி இல்லாம எப்படி