விபத்தில் காயமடைந்த கோவில் பூசாரி பலி

பெண்ணாடம்: மொபட்டில் இருந்து தவறி விழுந்த பூசாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் பச்சமுத்து, 54; நெய்வாசல் பூமாலையப்பர் கோவில் பூசாரி. கடந்த 3ம் தேதி காலை தனது மொபட்டில் முருகன்குடியில் இருந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.

கே.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகே நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இறந்தார். அவரது மகன் அஜித் புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement