புகார் பெட்டி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

காட்டுமன்னார்கோயில் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.சந்திரசேகர். கா.ம.கோயில்.

மின் விளக்கு வசதி தேவை

விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாமல் இருள்சூழ்ந்து கிடப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.


கண்ணபிரான், விருத்தாசலம்.


பரங்கிப்பேட்டை - கிள்ளை வெள்ளாற்று பாலத்தில் மின் விளக்கு இல்லாததால், இரவில் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.


சுப்ரமணியன், பரங்கிப்பேட்டை.




மின்விளக்கு சீரமைக்கப்படுமா?


பெண்ணாடம் அடுத்த முருகன்குடி - கிளிமங்கலம் இடையே உள்ள வெள்ளாறு மேம்பாலத்தில் பழுதான மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மோகன், காமராஜர் நகர்.



முட்புதர் அகற்றப்படுமா?


பெண்ணாடம் - தாழநல்லுார் சாலையில் திருமலை அகரம் முதல் நந்திமங்கலம் வரை சாலையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராமு, நந்திமங்கலம்.

Advertisement