தகவல் சுரங்கம் வெள்ளையனே வெளியேறு தினம்

தகவல் சுரங்கம்



வெள்ளையனே வெளியேறு தினம்


மும்பையில் 1942 ஆக. 8ல் 'செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை மகாத்மா காந்தி துவக்கி வைத்தார். இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். லட்சக்கணக்கானோர் கைதாகினர். இது ஆங்கிலேயரிடம் இனியும் இந்தியாவை நாம் ஆள முடியாது என்ற எச்சரிக்கையை ஆழமாக ஏற்படுத்தியது.

Advertisement