நிழற்குடையை மறைத்து த.வெ.க., பேனர்

சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி பிரிவில் வாலாந்துாரில் நடக்கும் நலத்திட்ட, இணைப்பு விழாவிற்காக செல்லம்பட்டி ஒன்றிய த.வெ.க., சார்பில் நிழற்குடையை மறைத்து 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

அப்பகுதி செந்தில்செல்வம் கூறியதாவது: முறையான அனுமதியின்றி 'பிளக்ஸ்' வைத்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. தினமும் பலர் நரியம்பட்டியிலிருந்து 2 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளதால் நிழற்குடையில் சிறிது நேரம் இளைப்பாறுவர். நிழற்குடை அருகே ஒதுங்க வேறு இடமில்லாததால் மழை, வெயிலில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்றார்.

Advertisement