த.வெ.க.,வினர் 2 பேர் கைது

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சுஜித், 30; த.வெ.க., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர். த.வெ.க.,வை சேர்ந்த மற்றொருவர் தில்லை, 32; இவர்கள் இருவரையும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற பிறகு கோவைக்கு அழைத்து சென்றனர். பணப்பரிமாற்றம் தொடர்பாக, சுஜித் மீது, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement