நியாயமான நிதி பகிர்வு கோரும் அரசு தீர்மானம் நிறைவேற்றம்: திமுக, அதிமுக ஆதரவு
நமது நிருபர்
மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு கோரி தமிழக சட்டசபையில் தவெக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்தன. பிறகு இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசு உறுதி செய்ய கோரி, சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சி கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிக்கு இணங்க மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழகம் மாநிலத்திற்கு உரிய நிதி பகிர்வினை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில் மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான மற்றும் சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எதிர்காலத்தில் மத்திய வரிகளின் பகிர்வு தொர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது தமிழகம் மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக, அதிமுக ஆதரவு
இந்த தனித்தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகையில், ''தமிழக அரசின் தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. நிதி பகிர்வை அதிகரிக்க அதிமுக வலியுறுத்தியது. நிதி பகிர்வில் தமிழகம் பாதிக்க கூடாது", என்றார்.
தீர்மானத்தில் திருத்தம் கோரி திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேசுகையில், ''மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வை உறுதி செய்ய தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு குறைவதால், தமிழ்நாடு அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது”, என்றார்.
நிறைவேற்றம்
பிறகு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு நியாயமான வரிப்பகிர்வு குறித்த அரசின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
வாசகர் கருத்து (17)
V.Mohan - ,இந்தியா
07 ஆக்,2026 - 16:45 Report Abuse
நல்லான் ஆக இல்லாம பொல்லான் ஆக இருக்கும் சுள்ளான் , சும்மா எம் பணம் எம்பணம் என்று தாவிக் குதித்து கூப்பாடு போட்டால் ஆகிடுமா? எம்மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் என்று சொல்லுறீங்க. ஆனால், நாளொரு பாட்டிலும் பொழுதொரு கட்டிங்குமாக,, உழைக்கும் மக்களின் வியர்வைவின் பணத்தை சாராயத்திற்காக, பிடுங்கி கொள்ளையடித்து தமது பணப்பெட்டிகளை நிரப்பும் சாராய ஆலை அதிபர்களான தீய சக்தி அரசியல் வாதிகளுக்கு பின்பாட்டுபாடி முட்டு கொடுக்கிறீங்களே நியாயமா??? இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு என்ன இதுவரை செஞ்சிருக்கீங்க?. தேசத்தை காக்க சாதாரண ஏழைகளும் ராணுவத்தில் பணி புரிகிறார்கள். எல்லா மக்களும் பங்கு பெறாமல் அவர்களை எப்படி பாதுகாப்பது?? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
07 ஆக்,2026 - 16:09 Report Abuse
வேறெதற்கு கோரிக்கை? பேக்கேஜ் போட்டு அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்குதானே? 0
0
Reply
Krishna Gurumoorthy - CHENNAI,இந்தியா
07 ஆக்,2026 - 14:30 Report Abuse
எப்படி பகிர வேண்டும் என்பதைச் சொல்லவில்லைஅதை வைத்து கொண்டு ஐந்து ஆண்டுகள் ஓட்டி விடலாம் 0
0
Reply
PARTHASARATHI J S - ,
07 ஆக்,2026 - 14:30 Report Abuse
நீட்டிற்கு கூட தீர்மானம் போட்டார்கள். ஏதாவது நடந்ததா?
இந்த தீர்மானமும் ஜி.எஸ்.டீ கவுன்சிலில் கொடுக்கப்படும். அவர்களும் வாங்கி பைஃல் செய்து கொள்வார்கள்.
இதே டிராமா அடுத்த வருடமும் தொடரும். 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
07 ஆக்,2026 - 14:24 Report Abuse
மாநில அரசுகள் வாக்கு வங்கி அரசியல் கருதி செய்யும் இலவசங்களை முதலில் நிறுத்த வேண்டும். அரசு திட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், தூர் வாருதல் இவற்றில் நடைபெறும் ஊழல்தான் எத்தனை எத்தனை? நிதிப் பகிர்வு குறித்து பேசும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள், அரசு நிதிச் சூறையாடல் குறித்தும் பேச வேண்டும். பேசுவார்களா? 0
0
Reply
Aarbinms - Bangalorw,இந்தியா
07 ஆக்,2026 - 13:49 Report Abuse
நிதி என்ற உடனே ரெண்டு த்ரவிஷன்களும் ஒண்ணா ஜோடி சேர்ந்துட்டானுங்க. திருட்டு பயலுக. 0
0
Reply
GMM - KA,இந்தியா
07 ஆக்,2026 - 13:35 Report Abuse
இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சி கொள்கைகள் என்று ஒன்று தேவை என்றால், உயர் கல்வி, மருத்துவ, தேச பாதுகாப்பிற்கு மத்திய அரசு கொள்கையை தமிழகம் ஏற்க்குமா? தமிழக மாவட்டங்களுக்கு நிதி சார் கூட்டாட்சி கொள்கை என்ன? திராவிட கோஷ்டி ஆதரித்தால் மசோதாவால் குழப்பம் நிச்சயம். 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
07 ஆக்,2026 - 12:51 Report Abuse
தீர்மானம் நிறைவேற்றியவனும் , அதனை ஆதரித்தவனும் எந்த விதமான புள்ளி விவரத்தையும் சொல்ல மாட்டாங்க .. ஈயம் பூசினா மாதிரியும் இருக்கனும் ,பூசாத மாதிரியும் இருக்கனும். இதல்லாம் ஒரு தொழில் ரகசியம் மாப்பு .. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
07 ஆக்,2026 - 12:44 Report Abuse
டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக முன்னேறும் மாநிலம் மற்ற பிற்பட்ட மாநிலங்களுக்கு உதவ விட்டுக்கொடுக்க வேண்டுமே தவிர மேலும் மேலும் கூடுதல் நிதி கேட்பதை ஏற்க முடியாது. நம்மைப் போல் நல்லகால நிலை, அதிக குளிர் வெப்பம் இல்லாத சமமான வெப்பநிலை, வசதியான துறைமுகங்கள் போன்ற இயற்கை அமைப்பில்லாத மாநிலங்களை வஞ்சித்து பிழைக்க வேண்டுமா? 0
0
SULLAN - chennai,இந்தியா
07 ஆக்,2026 - 14:40Report Abuse
மந்தவெறியில் ஊறித்திளைத்த மழு மட்டைகள் எம் மக்கள் உழைப்பை சுரண்டி மட்டும் வாழலாமா?? 0
0
Reply
குரு, நெல்லை - ,
07 ஆக்,2026 - 12:43 Report Abuse
kendriya vidyalaya பள்ளி NO.
நவோதய பள்ளிகள் NO.
மத்திய அரசின் திட்டங்கள் strictly NO.
ஆனால் பாருங்க நிதி மட்டும் வேண்டும்.
ஏற்கனவே இந்த தமிழ் நாடு கேடு கேட்ட நிதியின் குடும்பத்தால் சீரழிந்தது போதாதா..... 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement