முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு;தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோரி மனைவி சங்கீதா தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி கடந்த 2025ம் ஆண்டு டிச.24ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டும் என்று சங்கீதா கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரன்சிங் விசாரணை இல்லை என கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சட்டசபை நடப்பதால் விவாகரத்து வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இன்றே விசாரிக்க வேண்டும் என வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான சங்கீதா வைத்த கோரிக்கையை ஏற்று, பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்து செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பிறகு மதியம் 1 மணிக்கு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.
சிறப்பு வீடியோ!
சட்டசபையில் முதல்வர் விஜய்; விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் -
-
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி பயிற்சி
-
நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி
-
செப்.,1 முதல் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்கும் ஏர் இந்தியா
-
வெள்ளிக்குறிச்சியில் 1008 திருவிளக்கு பூஜை
-
மும்பையில் பிரசாந்த் கிஷோர்; தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு