டயர் வெடித்து கவிழ்ந்த வேன்
வடமதுரை, ஆக.9-
வடமதுரை அருகே சிமென்ட் துாண், பலகைகளை ஏற்றிச்சென்ற சரக்கு வேனின் டயர் வெடித்ததில் ரோட்டில் கவிழ்ந்தது.
திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதுாரை சேர்ந்தவர் பொன்னர் 35. நேற்று காலை மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு நிலத்திற்கு வேலி அமைக்க சிமென்ட் துாண், பலகைகளை ஏற்றிய சரக்கு வேனை ஓட்டிச்சென்றார்.
வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் சென்ற போது அதிக எடை, டயர் பலவீனம் காரணமாக வேனின் பின்புற டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியனையொட்டி ரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் பொன்னர் காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வள்ளுவர் குறளுக்கு 133 கவிக்குரல்கள்
-
அன்று மட்டை வாங்க வசதி இல்லை இன்று தமிழக ஹாக்கி அணி வீரர் சுபாஷ்... சபாஷ்
-
வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு போராட்டம்; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்லை: தர்மேந்திர பிரதான்
-
ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி வீடியோ வெளியீடு
-
சவடு மண் அள்ள ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி கோட்டாட்சியர் கைது; முகாம் அலுவலகத்தில் ரூ.5.52 லட்சம் பறிமுதல்
Advertisement
Advertisement