நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிப்பு; வரலாற்றில் இதுவே முதல்முறை என சட்டசபையில் முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை: நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அவர்மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையினை ஓராண்டில் ரூ.156க்கு மேல் உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறை, என்றார்.
முதல் முறை
பொதுரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.159 அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையினை ஓராண்டில் ரூ. 156க்கு மேல் உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
அதேபோல 2025-26 கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதற்கும் மேல் தமிழக அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 கரும்பு விலையாகக் கிடைக்கப்பெறும்.
5 ஆண்டுகளில்...
கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத் தொகை ரூ. 156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது முதல் ஆண்டிலேயே ரூ. 360.50 உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் ரூ. 134க்கு மேல் வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
நமது அரசு எப்போதும் விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல் அவர்களோடு தோளோடு தோள்கொடுத்து விவசாயம் சிறக்கவும், ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
உங்கள் தேர்தல் வாக்குறுதி முழு விவசாய கடன் தள்ளுபடி எப்போது ?
தண்ணிக்கு வழியில்லாத போது ஊக்கத்தொகை எதற்கு உதவும்? நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதால் போர்வெல்லும் உதவாது. அதிக ஆழத்தில் எடுக்கப்படும் உப்பு நீர் நிலவளத்தை கடுமையாக பாதிக்கும்.
ஒரு வருஷம் மாற்று பயிர் விவசாயம் செய்து குறைந்த நீரில் பயிரிடலாம் .. கரும்பு விவசாயம் பண்ணி மது தயாரிப்பது தான் அதிகம் .. சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ... அதன் தேவையை பூர்த்தி செய்யலாம் ...அரிசி உபயோகத்தை குறைப்பதும் நல்லது ..சக்கரை வியாதிக்கு அரிசி சாதம் இட்டலி தோசை முக்கிய பங்களிக்கிறது
தண்ணிக்கு வழியில்லாத போது ஊக்கத்தொகை எதற்கு உதவும்? நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதால் போர்வெல்லும் உதவாது. அதிக ஆழத்தில் எடுக்கப்படும் உப்பு நீர் நிலவளத்தை கடுமையாக பாதிக்கும்.
பருவமழை பொய்த்து அணைகள் வறண்டுபோயுள்ள காலத்தில் நெல் கரும்பு கோதுமை சாகுபடிக்கு பதிலாக குறைந்த நீர்த்தேவையுள்ள பருப்பு, எண்ணெய் வித்துக்கள் பயிரிட மத்திய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது தெரிந்தும் அதற்கு மாறாக நெல் கரும்புக்கு ஊக்கத் தொகை அளிப்பது முரண். தற்போதைய கையிருப்பு நெல்லைப் பாதுகாக்கவே அரசிடம் கிடங்குகள் இல்லை. மேலும் அதையே விளைவிப்பது வீண். உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளுக்காக (கடனில் தவிக்கும்) அரசு இதை செய்யலாமா?மேலும்
-
சென்டர் மீடியனை கடக்கும் வாகனங்கள்
-
அலங்கோலமாக காட்சியளிக்கும் மானாமதுரை அலங்கார குளம்
-
தினமலர் செய்தி எதிரொலி வைகை ஆற்றில் துாய்மை பணி
-
காஷ்மீரி பண்டிட்களுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
-
ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடு
-
குறைதீர் கூட்டத்தில் மனுவை பதிய காத்திருந்து மக்கள் அவதி: சர்வர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்