ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்
ராஞ்சி: ஜார்கண்டில் அரசு பணியாளர் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக சென்றனர். அவர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) மாணவர்கள் சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர். அதனை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறி சென்றனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இருப்பினும் மாணவர்கள் சட்டசபையை நெருங்கி சென்றதால், அவை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
முற்றுகை
இதற்கிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு எதிர்க்கட்சி தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜ தலைவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
கைது
இந்நிலையில் தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டேவை சிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பப்பு , சொப்பு, கரையான்கள், ஓ சி பிட்சா , சமோசா ,சாப்பிடும் சலூன்காரிகள் முதல் உணவகங்களில் குத்தாட்டம் போடும் கும்பல்கள் எங்கே ?
சோரன்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை.
ஒன்றிய ராசு என்றாலே மாணவர் விரோத அரசு என்று பெயர் எடுக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பிரியன் அந்த சமூக விரோத கரப்பான் கூட்டத்தில் ஒருவர் போல...
காக்ரோச் பார்ட்டி'யைச் (Cockroach party) சேர்ந்த திரு. அபிஷேக் மற்றும் திரு. சௌரவ் தாஸ் ஆகிய நீங்கள் இருவரும் இதுவரை ஏன் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு செல்லவில்லை? போராட்டங்களை முன்னின்று நடத்த அனுபவசாலிகளான ராகுல், பிரியங்கா, கார்கே, அகிலேஷ் மற்றும் கெஜ்ரிவால் ஆகியோரின் வருகைக்காக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நீண்ட நாட்களாக காத்து கொண்டிருக்கிறார்கள். சில அனுபவமுள்ள போராட்டக் காரர்களையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் அனைவரும் அங்கு சென்று அவர்கள் எதிர்பார்க்கும் ஆதரவை தந்து மாநில கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் நாள் வரை மாநில அரசை எதிர்த்து போராடுவீர்கள் என அவர்கள் அணைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த கரப்பான் பூச்சிகளுக்கு எவனாவது ஹிட் அடித்து விட்டார்களா. சத்தத்தை காணோம். இல்லை டெல்லி மட்டுமே குறியா