நண்பர்களுக்குள் தகராறு இருவர் மீதும் வழக்கு  

நடுவீரப்பட்டு.ஆக.11–: சி.என்.பாளையத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் சிவா,24;விலங்கல்பட்டு மேட்டுதெருவை சேர்ந்தவர் ராம்குமார்,27;இருவரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் இரவு சி.என்.பாளையத்தில் இருவரும் மது குடிக்கும் போது இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் சிவா,ராம்குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து நடுவீரபட்டு போலீசில் சிவா,ராம்குமார் ஆகிய இருவரும் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement