லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க.,
- நமது நிருபர் -
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட த.வெ.க., நிர்வாகியின் மனைவிக்கு, அதே மாவட்ட இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜி-பே லஞ்சம்...
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், த.வெ.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் வீராசாமி. இவர் ஒப்பந்ததாரர் நவீன் என்பவரிடம் பணி உத்தரவு மற்றும் பணிகளுக்காக 'ஜி-பே' மூலம் ரூ.1 லட்சமும், நேரில் ரூ.30 ஆயிரமும் லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
வீடியோவில் இருந்த மனைவிக்கே பதவி!
கணவர் லஞ்ச வழக்கில் சிக்கி நீக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் வகித்து வந்த அதே 'செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர்' பதவி, அவரது மனைவி ஹேமாவதிக்கு வழங்கப்பட்டு த.வெ.க., சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. வீராசாமி ஒப்பந்ததாரரிடம் லஞ்சப் பணம் வாங்கும் போது, பக்கத்திலேயே அவரது மனைவி ஹேமாவதியும் அமர்ந்திருந்ததாக அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியிருந்தது. லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய நபரின் மனைவிக்கே மீண்டும் அதே பொறுப்பைத் தூக்கிக் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
தொண்டர்கள் கொந்தளிப்பு!
கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தும் முதல்வர், லஞ்சப் புகாரில் சிக்கியவரின் குடும்பத்திற்கே மீண்டும் முக்கியப் பதவியை தாரைவார்த்திருப்பது த.வெ.க., தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த லஞ்சம் குடுத்தவர் முதல்வர் சொன்ன அந்த மந்திரத்தை அதாவது நான் லஞ்சம் குடுக்கமாட்டேன். நடப்பது விசய் ஆட்சி என்று சொல்ல மறந்துவிட்டார் போல. அதை சொல்லியிருந்தால் இப்படி நடந்திருக்காது. தப்பு லஞ்சம் குடுத்தவன் மேல. அந்த ரட்சக மந்திரத்தை மனப்பாடம் செஞ்சு வச்சிருக்க வேண்டாமா.
மனைவிகள் பொதுவாக தங்கள் கணவருக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை என்று கூறுவார்கள். இங்கு இதில் உண்மையோ அதனால் தான் மாற்றம் அன்று பலர் பேசிக்கொள்கிறார்கள்.
இன்னுமாடா த வெ க வை நம்பறீங்க
திமுகவே பரவாயில்லை.
கட்சிக்காக பெரிய அளவில் தொண்டு செய்துக்கொண்டிருக்கிறார் போல.
dhamash
எவ்வளவு பாவங்கள் செய்தாலும் ஒரு சர்ச்சுக்கு போய் முட்டி போட்டு பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்டால் போதும் என்று நினைக்கும் கூட்டம் கொள்ளை கூட்டம் இதற்கு ஓட்டு போட்ட அறிவாளி இந்துக்களை தான் திட்ட வேண்டும் பிரிட்டிஷ் கிறிஸ்தவரிடம் இருந்து கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை சோற்றுக்கு மதம் மாறிய கிறிஸ்துவரிடம் அடகு வைத்த அறிவால் இந்துக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்டும் நடக்கட்டும்
Good comment
இருவருமே ஒரே குட்டையில ஊரினவங்கதானே அப்புறம் என்ன கணவன் மனைவி.இருவரையும் கலையெடுக்கனும்
super.
டெய்லி. Read dinamalar. 40 years very good