அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 14ம் தேதி நடக்கிறது
திருப்பூர்:அனைவருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி, வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளையும் திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெறும் ஒன்றுபட்ட மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்கவும், பயிர்க்கடன் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் பங்கேற்கச் செய்யவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க.,
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை குறித்த தனி தீர்மானம் நிறைவேறியது!
-
பேராசிரியர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது
-
கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம்
-
என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியருக்கு கத்தி குத்து
-
‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு பாட விருப்பங்களை நாளைக்குள் புதுப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement