சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்:நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டமாக தேசியக்கொடி இயக்கத்தை துவக்கி வைத்து வீட்டில் அனைவரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையொட்டி திண்டுக்கல் எம்.வி.எம்.,கல்லுாரி மை பாரத் மன்றம், மாவட்ட இளையோர் பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை முதல்வர் லட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட இளையோர் நலத்துறை அலுவலர் சிவசண்முகம் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் ஆர்.எம்., காலனி 80 அடி ரோடு வரை சென்று மீண்டும் கல்லுாரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தி சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி மை பாரத் இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி செய்திருந்தார். பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க.,
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை குறித்த தனி தீர்மானம் நிறைவேறியது!
-
பேராசிரியர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது
-
கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம்
-
என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியருக்கு கத்தி குத்து
-
‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு பாட விருப்பங்களை நாளைக்குள் புதுப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்