இடம்மாறினாலும் சட்டை பாக்கெட்டில் இருப்பது யார் படம்; சட்டசபையில் காரசார விவாதம்

28


நமது நிருபர்




''சட்டசபையில் ஓ.பி.எஸ் இடம் மாறியுள்ளவர் என செங்கோட்டையன் விமர்சனத்துக்கு முதலில் இடத்தை மாற்றியவர் செங்கோட்டையன் என ஓபிஎஸ் பதில் அளித்தார். உடனே அமைச்சர்கள் ஆதவ் ராஜ்மோகன், ஓபிஎஸ்யின் பாக்கெட்டில் இருந்த படம் மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டினர். சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது: புதிய அரசின் திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் தேடுகிறேன். தேடுகிறேன். தேடிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை;

அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை மறந்து முதல் பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது. பெயர் மாற்ற பட்டியல் போல் தமிழக பட்ஜெட் வெளியாகி உள்ளது. திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

துதிபாட அவசியமில்லை

இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசியதாவது: தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 5 ஆண்டுகால இறுதிக்குள் நிறைவேற்றப்படும்; 3 மாதங்களில் சரித்திரம் படைக்க இயலாது; நீங்கள் அப்படி சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள்.

தமிழகமே பாரட்டி கொண்டு இருக்கும் தூய ஆட்சியை பற்றி, ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள், பரவாயில்லை. அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.


ஓபிஎஸ் பதில்




இதற்கு ஓபிஎஸ் கூறியதாவது: முதலில் அந்த இடத்தை அவர் தான் மாற்றியவர் என்பதை இங்கே நான் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.


அமைச்சர்கள் சப்போர்ட்




உடனடியாக செங்கோட்டையனுக்கு ஆதவராக அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் ஆதரவாக பேசினர்.

ராஜ்மோகன்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசும் போது இடத்தை முதலில் மாற்றியவர் நம்முடைய அமைச்சர் என்றார். ஆனால் பாருங்கள் என்ன ஆச்சரியம் என்றால், இடத்தை மாற்றிய போதும் அவர் இதயத்தின் அருகே இருந்த நிழல் படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் செங்கோட்டையன், ஆனால் அண்ணன் பாக்கெட் பார்க்கும் போது இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது, என்றார்.


ஆதவ்: எங்கள் அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறி இருக்கலாம்; ஆனால் ஜெயலலிதாவை தன்னுடைய இதயத்தில், சட்டை பையில் இன்னும் வைத்து இருக்கிறார். ஜெயலலிதாவால் முதல்வர் ஆக்கப்பட்டவர் இன்றைக்கு அவருடைய சட்டை பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது, தமிழக மக்களுக்கு தெரியும், என்றார்.

இதற்கு ஓபிஎஸ் பதில் கூறுகையில், அண்ணாதுரை, ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரையும் எங்களுடைய இதயத்தில் கடைசி காலம் வரை வைத்து இருப்போம். படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை, என்றார்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடந்தது.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபையில் காரசார விவாதம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்



பிரத்யேக வீடியோ!

சட்டசபையில் ஓபிஎஸ் Vs அமைச்சர்கள் காரசார விவாதம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement