ரிசர்வ் சைட்டை மீட்டு பூங்கா அமைக்குமா? மாநகராட்சியிடம் எதிர்பார்க்கும் வடவள்ளி

படம் சதீஷ்குமார்



வடவள்ளி, ஆக. 15-

மாநகராட்சி 38வது வார்டுக்கு உட்பட்ட ஐ.ஓ.பி. காலனி, பாலாஜி நகரில், நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 20 சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. பகுதி மக்கள் அதை வாக்கிங் செல்லவும், சிறுவர்கள் விளையாடவும் பயன்படுத்தினர். திடீரென மாநகராட்சி அதில் கட்டட கழிவு, உடைந்த மரங்களை கொண்டு வந்து குவித்தது. அகற்றவே இல்லை. மொத்த இடமும் புதர் நிறைந்து விட்டது.

மாநகராட்சி அந்த இடத்தை சுத்தம் செய்து, வாக்கிங் செல்ல நடைபாதையும், சிறுவர்கள் விளையாட பூங்காவும் அமைத்து தர மக்கள் விரும்புகின்றனர்.

Advertisement