பெத்தி செமினர் பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினர் மேல்நிலைப்பள்ளியில், பாரதியார் இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது.

காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குமாரகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் கவுரவிருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் அரோக்கியராஜ் வாழ்த்திப் பேசினார்.

இம்மன்றத்தின் மூலம், பாரதியாரின், படைப்புகள், சிந்தனைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு கவிதை, வாசிப்பு, பேச்சு, இலக்கிய விவாதங்கள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Advertisement