செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 5வது, கடைசி தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் 'சின்க்யுபீல்டு' கோப்பை தொடராக நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று நான்காவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரீஸ்ட் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 13வது நகர்த்தலில் இருந்து முன்னிலை பெற்றார். முடிவில் 71வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்ற நான்கு போட்டிகளும் 'டிரா' ஆகின.
நான்கு சுற்று முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே (3.0), பிரான்சின் வாசியர் (2.5), அமெரிக்காவின் ஆரோனியன் (2.5), பிரக்ஞானந்தா (2.5) 'டாப்-4' இடத்தில் உள்ளனர்.

Advertisement