கையில் தேசியக்கொடியை ஏந்தி 3:29 மணி நேரம் மிதந்த மாணவி
கிருஷ்ணகிரி: கையில் தேசியக்கொடியுடன், 3:29 மணி நேரம் மிதந்து, கல்லுாரி மாணவி நித்யபாரதி, 18, அசத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் பஞ்.,க்குட்பட்ட கே.ஏ., நகரைச் சேர்ந்தவர் ராமன், 45. ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி வள்ளியம்மாள், 38. இவர்கள் மகள் நித்யபாரதி, 18. நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் ரோபோடிக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நித்யபாரதி பள்ளியில் நீச்சல் பயின்றபோது, மிதவை நீச்சலில் கின்னஸ் சாதனைபுரிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். பிளஸ் 2 தேர்வு விடுமுறை நாட்களில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார்.
தண்ணீரில் நீண்ட நேரம் கால்களை அகற்றாமல், கையை தலையில் வைத்து படுத்த நிலையில், 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நீரில் மிதந்து சாதனை படைத்தார். இது குறித்து, 'கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டு' அமைப்பினர், 2025 நவ., 9ல், சாதனையாளர் விருது வழங்கியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி, கால்களை நீட்டி படுத்து, காலை, 8:00 மணி முதல் 11:29 மணி வரை நீரில் மிதந்து சாதனை படைத்தார்.
நித்யபாரதி கூறுகையில், ''மிதவை நீச்சலில் கின்னஸ் சாதனைபுரிவதே என் இலக்கு. இதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறேன். கடந்த முறை, 1 மணி நேரம் மட்டுமே மிதவை நீச்சலை செய்து காட்டிய நிலையில், தற்போது தேசியக்கொடியுடன், மூன்றரை மணி நேரம் மிதவை நீச்சல் செய்துள்ளேன்,'' என்றார்.
வாழ்த்துக்கள். தங்க மங்கையே. உன்னுடைய நோக்கம் விரைவில் ஈடேற விழைகிறேன்.மேலும்
-
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகள், புதர் மண்டிய நீர்வரத்து ஓடைகள் சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
-
அரசு தேங்காய் கொள்முதல் செய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை
-
கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
-
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தினம்
-
அரிஸ்டோ பள்ளியில் சுதந்திர தினம்
-
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினம்