ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில்  சுதந்திர தினம் 

கடலுார்: கடலுார் ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழா நடந்தது. கடை உரிமையாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி, தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். கடை உரிமையாளர்கள் ஹரிஹந்த், சித்தார்த் முன்னிலை வகித்தனர். ஜூவல்லரி வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

விழாவில், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

 

Advertisement