அரிஸ்டோ பள்ளியில்  சுதந்திர தினம்

கடலுார்: கடலுார், வண்டிப்பாளையம் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. 

பள்ளியின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றி வைத்தார். பள்ளி முதல்வர் சங்கீதா வரவேற்றார்.

மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். 

Advertisement