சூதாடிய 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரீத்தா நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பெருவங்கூர் ஏரிக்கரை அருகே பணம் வைத்து சூதாடிய மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்த கோபால், 38; வடக்கனந்தல் சின்னமுத்து, 40; நிறைமதி ஏழுமலை, 25; சமத்துவபுரம் செல்வம், 39; மலைக்கோட்டாலம் வெங்கடேசன், 35; பெருவங்கூர் மாயவன், 63; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 35 ஆயிரத்து 580 ரூபாய் மற்றும் புள்ளித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement