சுதந்திர தின விழா

தேவகோட்டை: * தேவகோட்டை ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் செயலர் வெங்கடேசன் தலைமையில் ராமநாதன் கொடியேற்றினார். ஆசிரியை கிளாரா ஜெனிபர் சுதந்திர தின கட்டுரை வாசித்தார்.

* தேவகோட்டை நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் நூலகர் சூரசங்கரன் கொடியேற்றினார்.

* வெளிமுத்தி விலக்கு புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அமலோற்பவம் தலைமையில் தலைமையாசிரியர் அருள்செல்வி முன்னிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜவஹர் தேசிய கொடி ஏற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் மேரி பேசினார்.

யாதவ நர்சரி தொடக்கப்பள்ளியில் தலைவர் தனுஷ்கோடி தலைமையில் நிர்வாகிகள் அர்ச்சுனன், பாலமுருகன், ராஜேந்திரன் முன்னிலையில் தங்கவேலு கொடி ஏற்றினார்.

Advertisement