குழந்தை அழும் சத்தம்: பெரும்பாக்கத்தில் பீதி

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் அருகே சாலையோர முட்புதரில், குழந்தை அழும் சத்தம் தொடர்ந்த கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாக்கம் - நுாக்கம்பாளையம் பிரதான சாலையோர முட்புதரில் இருந்து, காலை பச்சிளங்குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அங்கு திரண்டு, புதருக்குள் தேடத் தொடங்கினர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மணி நேரம் கேட்ட அழுகுரல் திடீரென நின்றது. புதருக்குள் சென்று தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Advertisement