இரண்டாவது சுற்றில் லக்சயா சென் * உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...
புதுடில்லி: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
டில்லியில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 30வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியாவில் இரண்டாவது முறையாக (2009, 2026) இத்தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், ஆஸ்திரியாவின் கோலின்ஸ் பிலிமானை எதிர்கொண்டார்.
முதல் செட்டை லக்சயா 16-21 என நழுவவிட்டார். பின் சுதாரித்த இவர், அடுத்த இரு செட்டுகளை 21-8, 21-4 என வசப்படுத்தினார். 45 நிமிட போட்டி முடிவில் லக்சயா 16-21, 21-8, 21-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
உன்னதி வெற்றி
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி, மியான்மரின் தெட் துஜாரை சந்தித்தார். முதல் செட்டை 22-20 என போராடி வென்றார் உன்னதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் முந்திய இவர், 21-16 என கைப்பற்றினார். 40 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 22-20, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
* பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, அமெரிக்காவின் அல்லிசன், லாரென் ஜோடியை சந்தித்தது. 39 நிமிடம் நடந்த இப்போட்டியில் இந்திய ஜோடி 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
* கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி, ரோஹன் ஜோடி, கனடாவின் கிறிஸ்டல், ஜோனாதன் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 17-21 என போராடி தோற்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆஷித், அம்ருதா ஜோடி 21-16, 29-30, 22-24 என துருக்கியின் எம்ரே, பெக்டாஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு