உணவுப் பொருட்கள் வழங்கல்

கூடலுார்:லோயர்கேம்ப் பளியன்குடியில் 52 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேனி மாவட்ட சேவா பாரதி அமைப்பு சார்பில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பொருளாளர் திலகர், செயலாளர் முத்துக்குமரன், துணைத் தலைவர் கஜேந்திரன் முன்னிலையில் உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், ஆடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கூடலுாரில் உள்ள வள்ளலார் அன்னதான அமைப்பிற்கு அரிசி வழங்கப்பட்டன.

Advertisement